4 comments

காதல் கவிதை

உன் பூனை கண்கள் என்னை குருடாக்கின
உன் முத்து நாசிகள் என் மூச்சை தடுத்தன
உன் பூவிதழ் உதடுகள் என் உதட்டசைவை நிருத்தின
இது ஏன் என்று உனக்கு தெரியாமல் இருக்கலாம்
தெரிந்திருக்கிறது என் மேஜையினுள் உள்ள
உன் பெயர் கொண்ட காகிதங்களுக்கு!

(((நம்புங்கள் இது நான் எழுதிய கவிதை)))

6 comments

இக்கால வள்ளல்!?

கடையெழு வள்ளல்கள்
கொடுத்தார்கள்
புகழ் பெற்றார்கள்!
கர்ணன் கொடுத்தான்
பாரதத்தில் பெயர் பெற்றான்!
நானும் கொடுத்தேன்
என் இரத்தத்தை
என் மீது அமர்ந்த கொசுவிற்கு!
ஆம்.... நானும் வள்ளல் தானே?

ரஞ்சிதா
7ஆம் வகுப்பு