இக்கால வள்ளல்!?

கடையெழு வள்ளல்கள்
கொடுத்தார்கள்
புகழ் பெற்றார்கள்!
கர்ணன் கொடுத்தான்
பாரதத்தில் பெயர் பெற்றான்!
நானும் கொடுத்தேன்
என் இரத்தத்தை
என் மீது அமர்ந்த கொசுவிற்கு!
ஆம்.... நானும் வள்ளல் தானே?

ரஞ்சிதா
7ஆம் வகுப்பு

6 comments:

தமிழ். சரவணன் said...

இந்த இரத்த தானத்தில் கவனம் தேவை!
அது தங்களுக்கு மலேரியாவை தானமாக கொடுத்து விடும்....

அன்புடன்,
தமிழ். சரவணன்

பரிசல்காரன் said...

கிருத்திகாவை எங்களுக்குத் தெரியும். ரஞ்சிதா யாரு?

கிருத்திகா said...

பரிசல் அங்கிள்.......

இந்த கவிதையை ரஜ்சிதா என்கிற 7ஆம் வகுப்பு படிக்கும் பெண் பள்ளி டைரிக்கு எழுதியிருக்கிறாள்.

எனக்கு எப்பிடி கிடைச்சுதுனு கேட்காதீங்க?!

வால்பையன் said...

ரஞ்ஜிதா வள்ளல்கிட்ட கேழுங்க!
கொசு ரத்தத வந்து வாங்கிட்டு போகுமா?
இல்ல இவுங்க போய் கொடுத்துட்டு வருவாங்கலான்னு

நட்புடன் ஜமால் said...

கொசு கடி தாங்க முடியலை.

DG said...

கொசு கடி தாங்க முடியலை.